கடந்த வாரம் ஒரு நண்பருடன் Lake Tahoe-வில் நல்லா ஊர் சுத்திட்டு, மாலை பொழுதில் SFO வந்து கொண்டிருந்த சமயம்... பனி சறுக்கில் பல முறை சறுக்கி விழுந்ததால் உடம்பு ரணகளம்... நண்பர் கார் ஓட்ட, எனக்கு பாட்டு கேட்டு போர் அடிக்க, சரி எப்படி நேரத்த ஓட்றதுன்னு தெரியாம iPad எடுத்து தட்டிட்டு இருந்தேன்...கண்ணில் சிக்கினது கல்கியின் மோகினி தீவு... சிறு வயதில் படித்து என்றாலும், சரி இன்னொரு தடவை படிச்சிடலாம்னு எடுத்தேன்...
வழக்கம் போல கல்கியின் கற்பனை உலகத்தில் நானும் ஒருவனானேன்... என்னடா இது ஏற்கனவே படித்த மாதிரியே இல்லையேன்னு இருந்தது... இதுல இன்னொரு விஷயம், சில பல புது வார்த்தைகள் படிச்சேன்... நான் அவ்ளோ பெரிய படிப்ஸ் கிடையாது! படிக்கும் போதே அர்த்தம் கணிக்க முடிந்தது, இருந்தாலும் முதல்ல படிக்கும் போதே ஏன் இந்த வார்த்தைகளெல்லாம் நான் கவனிக்கலைன்னு நான் யோசிச்சிங்... அப்புறம் http://ta.wiktionary.org இருக்க பயமேன்... இருந்தாலும் படிச்சா இனிமே அரை குறையா படிக்க கூடாதுன்னு உரைத்தது...!
சில தெரியாத வார்த்தைகள்...
...சமிக்ஞையினால் நாங்கள் முகமன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில்...
...ஏதோ ஒரு மாய சக்தி என்னைப் போக வொட்டாமல் தடுத்தது...
...அடிக்கடி ஏதாவது நிந்தைமொழி கூறாவிட்டால்...
...அந்த தீவின் அற்புதங்கள் மேலும் சோபை பெற்று விளங்கும்...
..மாலை நேரங்களில் ஆலயங்களில் அடிக்கப்படும் ஆலாட்ச மணியின் சத்தம் வருவது போலக் கேட்டது...
சில பிடித்த வரிகள்...
............காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!...................
கற்பனையும் ரசனையும் படைத்தவர்...
கவிதையிலும் காவியத்திலும் முழுகியவர்...
அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அபூர்வந்தானே?
................தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு; தூரத்து வெடிச் சத்தம் காதுக்கு இனிமை!..............
.......என்னுடன் பேசி கொண்டிருக்கும் போதே, உம்முடைய கண்கள் என் வாழ்க்கைத் துணைவியின் முகத்தை அடிக்கடி நோக்குவதிலிருந்து உம்முடைய ரசிகத் தன்மையை அறிந்து கொண்டேன்...!!!.........
வழக்கம் போல கல்கியின் கற்பனை உலகத்தில் நானும் ஒருவனானேன்... என்னடா இது ஏற்கனவே படித்த மாதிரியே இல்லையேன்னு இருந்தது... இதுல இன்னொரு விஷயம், சில பல புது வார்த்தைகள் படிச்சேன்... நான் அவ்ளோ பெரிய படிப்ஸ் கிடையாது! படிக்கும் போதே அர்த்தம் கணிக்க முடிந்தது, இருந்தாலும் முதல்ல படிக்கும் போதே ஏன் இந்த வார்த்தைகளெல்லாம் நான் கவனிக்கலைன்னு நான் யோசிச்சிங்... அப்புறம் http://ta.wiktionary.org இருக்க பயமேன்... இருந்தாலும் படிச்சா இனிமே அரை குறையா படிக்க கூடாதுன்னு உரைத்தது...!
சில தெரியாத வார்த்தைகள்...
...சமிக்ஞையினால் நாங்கள் முகமன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில்...
...ஏதோ ஒரு மாய சக்தி என்னைப் போக வொட்டாமல் தடுத்தது...
...அடிக்கடி ஏதாவது நிந்தைமொழி கூறாவிட்டால்...
...அந்த தீவின் அற்புதங்கள் மேலும் சோபை பெற்று விளங்கும்...
..மாலை நேரங்களில் ஆலயங்களில் அடிக்கப்படும் ஆலாட்ச மணியின் சத்தம் வருவது போலக் கேட்டது...
சில பிடித்த வரிகள்...
............காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!...................
கற்பனையும் ரசனையும் படைத்தவர்...
கவிதையிலும் காவியத்திலும் முழுகியவர்...
அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அபூர்வந்தானே?
................தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு; தூரத்து வெடிச் சத்தம் காதுக்கு இனிமை!..............
.......என்னுடன் பேசி கொண்டிருக்கும் போதே, உம்முடைய கண்கள் என் வாழ்க்கைத் துணைவியின் முகத்தை அடிக்கடி நோக்குவதிலிருந்து உம்முடைய ரசிகத் தன்மையை அறிந்து கொண்டேன்...!!!.........




































































